இலங்கை

எல்லை தாண்டிய மேலும் 25 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து நேற்றும் (15) இன்றும் (16) இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார். 

கைதான 25 பேரும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். 

முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக கைதான மீனவர்கள் மற்றும் படகுகளும் காங்கேசன்துறை கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். 

கைதானவர்கள் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…