No products in the cart.
யானை தாக்குதலில் முதியவர் உயிரிழப்பு!
பானம பகுதியில், பானம குளத்திற்கு அருகில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி நபர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதலினால் குறித்த நபர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பானம தெற்கு பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் குளிப்பதற்காக பானம குளத்திற்குச் சென்றுவிட்டு, தனது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வாடிக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பானம பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
















