இலங்கை

முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச மகளிர் தினமான இன்று, முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம், வட்டுவாகல் பாலத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

இன்றுடன் தமது தொடர் போராட்டத்தின் ஒன்பதாவது ஆண்டில் கால் பதிக்கும் இவ்வுறவுகள், இறுதிப் போரின் போது கையளிக்கப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி கோரி இந்தப் போராட்டத்தை நடத்தினர்.

இறுதிப் போரின் போது ஆயிரக்கணக்கானோர் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கையளிக்கப்பட்ட இடமான வட்டுவாகல் பாலம், வலி சுமந்த ஒரு அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது.

அங்கு கூடியிருந்த பெருந்திரளான தாய்மார்கள் மற்றும் பெண்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர். ‘எமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது?’ என்ற கேள்விக்கு உரிய பதிலும், சர்வதேச ரீதியிலான நீதியும் கிடைக்க வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…