இலங்கை

போதைப்பொருள் சந்தேகத்தில் மற்றொரு படகும் மீட்பு!


பேருவளை பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பலநாள் மீன்பிடி படகையும் கடற்படையினர் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். 

தேவேந்திரமுனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட பலநாள் மீன்படி படகு இன்று (16) திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அது தொடர்பான விடயங்களை தௌிவுப்படுத்தும் போதே, அவர் இதனை கூறியுள்ளார். 

அந்தப் படகு தற்போது கரைக்கு கொண்டு வரப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இந்த நேரத்தில் கடற்படையினரின் நடவடிக்கையில், போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த மற்றுமொரு மீன்பிடி படகை சற்று முன்னர் கண்டுபிடித்துள்ளனர். 

அதில் உள்ள போதைப்பொருளின் அளவை இப்போதே சரியாகக் கூற முடியாது. படகை கரைக்கு கொண்டு வந்த பின்னரே அது குறித்துத் தெரிவிக்க முடியும். 

இதற்கு முன்னரும் கடந்த வாரத்தில் தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்திய 3 பலநாள் மீன்பிடி படகுகளை கடற்படையினர் கண்டுபிடித்திருந்தனர். 

அதன்படி, இந்த ஆண்டில் மட்டும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 7 பலநாள் மீன்பிடி படகுகளை கடற்படையினர் சுற்றிவளைத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…