இலங்கை

இருவர் குஷ் போதைப்பொருளுடன் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக எடையுள்ள குஷ் ரக போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு இணைந்து முன்னெடுத்த சோதனையின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து நாட்டிற்கு வந்த சந்தேக நபர்களிடமிருந்து 1 கிலோ 632 கிராம் குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. 

போதைப்பொருளுக்கு மேலதிகமாக, சுகாதார அமைச்சு மற்றும் தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட மருந்துத் தொகுதிகளும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. 

இவர்கள் கொழும்பு 8 பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…