கனடா

போதைப்பொருள் கடத்தல்: கனடா எல்லைப் பாதுகாப்பு அதிகாரி கைது!

பல மில்லியன் டாலர் மதிப்புள்ள போதைப்பொருட்கள் மற்றும் புகையிலை அடங்கிய லாரியைச் சட்டவிரோதமாக எல்லை கடக்க அனுமதித்ததாக, கனடா எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனத்தின் (CBSA) அதிகாரி ஒருவர் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நயாகரா-ஆன்-த-லேக் பகுதியில் உள்ள குவீன்ஸ்டன்-லூயிஸ்டன் (Queenston-Lewiston) எல்லைச் சாவடியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எல்லையில் பணியில் இருந்த அதிகாரி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஓபியம் (Opium), கஞ்சா (Cannabis) மற்றும் புகையிலை நிரப்பப்பட்ட சரக்கு லாரியை, முறையான சோதனையின்றி கனடாவுக்குள் நுழைய அனுமதித்துள்ளார்.

இது தொடர்பாக அந்த அதிகாரி கடந்த ஜனவரி மாதம் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டார். அவருடன் அந்த லாரியின் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார்.

மார்ச் 6-ஆம் திகதி, இருவர் மீதும் தீவிரமான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

டேனியல் நோடாரியானி என்ற அதிகாரியே கைது செய்யப்பட்டுள்ளார், இவர் வரும் மார்ச் 23, 2026 அன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

அபிஷேக் என்ற லொறி சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத பொருட்களை இறக்குமதி செய்யச் சதி செய்தல், போதைப்பொருள் கடத்தல், விற்பனைக்காகப் புகையிலையை வைத்திருத்தல் மற்றும் விநியோகித்தல் உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. 

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…