கனடா

டொராண்டோவில் மீண்டும் உயரும் பெட்ரோல் விலை

டொராண்டோ பெரும்பாக பகுதியில் (GTA) பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.72 டொலர் என்ற அளவைத் தாண்டியுள்ளது.

எதிர்வரும் நாட்களில் இந்த விலை மேலும் உயரக்கூடும் எனவும், கோடை காலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 2 டொலர் என்ற உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

எரிபொருள் சந்தை ஆய்வாளர் டான் மெக்டீக் (Dan McTeague) இது குறித்து பல முக்கியத் தகவல்களை பகிர்ந்துள்ளார்.

ஏப்ரல் மாத நடுப்பகுதியில் கோடைக்காலத்திற்கு ஏற்ற சிறப்பு எரிபொருள் கலவை அறிமுகப்படுத்தப்படும். இதனால் லிட்டருக்கு சுமார் 10 சதங்கள் வரை விலை உயரும். இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர்ச் சூழல் உலகளாவிய எரிசக்தி சந்தையைப் பாதித்துள்ளது.

குறிப்பாக, உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு விநியோகஸ்தரான கத்தார் மீதான தாக்குதல்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் செல்லும் இந்த வழித்தடம் தற்காலிகமாக முடங்கியுள்ளது.

இதன் விளைவாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை போர் தொடங்கியதில் இருந்து சுமார் 50% அதிகரித்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்வதுடன், டீசல் விலையும் அதிகரிப்பதால் அது நேரடியாக உணவுப் பொருட்களின் விலையில் எதிரொலிக்கும். “பெட்ரோல் விலை உயர்வு என்பது வெறும் வாகனங்களுக்கு மட்டுமல்ல, அது உங்கள் மளிகைப் பொருட்களின் விலையையும் (Grocery bills) பல மடங்கு உயர்த்தும்,” என மெக்டீக் எச்சரிக்கிறார். 

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…