இலங்கை

1,820 லீற்றர் டீசலுடன் மற்றுமொருவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி 1,820 லீற்றர் டீசலை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் சேருனுவர பகுதியில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்தத் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சேருனுவர பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருனுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…