விளையாட்டு

ஒலிம்பிக்கில் திருநங்கைகள் பங்கேற்க தடை

2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக, பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிறைவேற்று உத்தரவுக்கு இணங்க, ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான பிரிவில் திருநங்கைகள் பங்கேற்பதைத் தடை செய்யும் புதிய தகுதிக் கொள்கையை சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது. 

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் இப்புதிய கொள்கையின்படி, 

எதிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான பிரிவுகளில் பங்கேற்கும் தகுதியானது, உயிரியல் ரீதியான பெண்கள் (Biological females) என்ற அடிப்படையில் மட்டுமே வரையறுக்கப்படும். 

இதனை உறுதிப்படுத்த, ஆண் உயிரியல் பாலினத்தைக் கண்டறியும் மரபணுச் சோதனை போன்ற வைத்திய நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். 

திருநங்கை தடகள வீரர்களின் பங்கேற்பு குறித்து இதற்கு முன்னர் உலகளாவிய தரம் எதுவும் இல்லாத நிலையில், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் அணுகுமுறையில் இது ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது. 

அமெரிக்காவின் தற்போதைய நிறைவேற்று வழிகாட்டல்களுடன் தொடர்புடைய இக்கொள்கையை ஏற்றுக்கொள்வதன் மூலம், சர்வதேச அளவிலான மகளிர் போட்டிகளுக்கு ஒரு நிலையான உலகளாவிய கட்டமைப்பை உருவாக்க சர்வதேச ஒலிம்பிக் குழு இலக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

What's your reaction?

Related Posts

குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 56 ஆவது லீக் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. நாணய சழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 20 ஓவரில் 155 ஓட்டங்களை…