இலங்கை

ஆழ்கடலில் அதிரடி வேட்டை: போதைப்பொருள் படகுடன் 6 பேர் கைது!

இலங்கைக்கு தென்மேற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் உள்நாட்டு பலநாள் மீன்பிடி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. 

இந்த விசேட நடவடிக்கையின் போது படகுடன் சேர்த்து 6 சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகு மற்றும் 6 சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் தரைக்கு அழைத்து வரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

தேசிய பாதுகாப்பிற்காக நாட்டைச் சூழவுள்ள கடல் வலயங்களை உள்ளடக்கிய வகையில் கடற்படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளின் போதே இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…