இலங்கை

இலங்கைக்கு தென்மேற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் உள்நாட்டு பலநாள் மீன்பிடி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. 

இந்த விசேட நடவடிக்கையின் போது படகுடன் சேர்த்து 6 சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகு மற்றும் 6 சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் தரைக்கு அழைத்து வரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

தேசிய பாதுகாப்பிற்காக நாட்டைச் சூழவுள்ள கடல் வலயங்களை உள்ளடக்கிய வகையில் கடற்படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளின் போதே இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…