இலங்கை

மலையகத்தில் களைகட்டிய உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள்

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் உயிர்த்த ஞாயிறு பெருவிழா, இன்று (05) மலையகப் பகுதிகளில் மிகுந்த பக்திப்பரவசத்துடன் கொண்டாடப்பட்டது. 

இதனை முன்னிட்டு ஹட்டன் மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பிரதான தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் நடைபெற்றன. 

ஹட்டன் புனித சிலுவை தேவாலயத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நடைபெற்ற பிரதான ஆராதனைகளுக்கு, அந்த ஆலயத்தின் திருத்தலப் பொறுப்பாளர் அருட்தந்தை எட்வின் ரொட்ரிகோ தலைமை தாங்கினார்.

இதேவேளை, நுவரெலியா புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயத்தில் நள்ளிரவு ஆராதனைகள் இடம்பெற்றதுடன், நானுஓயா புனித ரீட்டா தேவாலயத்தில் பங்குத்தந்தை சற்குண ராஜா தலைமையில் உயிர்த்த ஞாயிறு விசேட வழிபாடுகள் நடைபெற்றன. 

இந்த விசேட திருப்பலிகளில் பெருமளவிலான கிறிஸ்தவ பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர். 

அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில், இராணுவம், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தேவாலயங்களைச் சூழ பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…