இலங்கை

“ஜனாதிபதி முன்னிலையில் 59வது தேசிய புத்தரிசி விழா முகாம்பு”


59 ஆவது தேசிய புத்தரிசி விழா, ஜனாதிபதி தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமான இந்த மாபெரும் கலாசார விழாவின் போது, விவசாயிகள் மிகுந்த பக்தியுடன் தயாரித்த தமது முதற்போக அறுவடையை புத்தபெருமானுக்கு அர்ப்பணித்தனர். 

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எமது கலாசாரத்தின் பெரும் பகுதியாக விவசாயம் பின்னிப்பிணைந்துள்ளதாகத் தெரிவித்தார். 

புத்தரிசி விழா அதன் உச்சகட்ட பலனாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் அடையாளமும் கலாசாரமும் இதன் மூலம் பிரதிபலிக்கின்றது என்றும் கூறினார். 

கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிப்பதே தமது நோக்கம் எனவும், அதற்காக வலுவான தொலைநோக்குப் பார்வையும் வேலைத்திட்டமும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார். 

அத்துடன், விவசாயிகளின் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்காகத் தெளிவான உறுதிப்பத்திரங்களை   வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…