இலங்கை

கைதிகளை சந்திக்க பொதுமக்களுக்கு விசேட வாய்ப்பு

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதற்கமைய இன்றும் (14) இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். 

சிறைச்சாலைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு இணங்க, அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த விசேட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

கைதிகளின் உறவினர்களால் கொண்டு வரப்படும் உணவு அல்லது இனிப்புப் பண்டங்கள் அடங்கிய பொதி மற்றும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய ஒரு பொதி என்பவற்றை ஒரு கைதிக்கு போதுமான அளவில் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…