இலங்கை

நண்பர்களுக்குள் மோதல்: பலத்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்


களுத்துறை, பாயகலை பகுதியில் புத்தாண்டு மதுபான விருந்தின் போது ஏற்பட்ட மோதலில், நபர் ஒருவர் மரப் பலகையால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த மோதல் முற்றிய நிலையில், பாயகலை தொடருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள காய்கறி விற்பனை நிலையத்துக்கு முன்பாக வைத்து மேற்படி நபர் பலமாகத் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். பாயகலை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பாயகலை பொலிஸார், சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…