கனடா

கனடாவில் சட்டவிரோத துப்பாக்கித் தயாரித்த இளைஞர் கைது

கனடாவின் டொராண்டோ நகரில் 3D பிரிண்டர் மூலம் சட்டவிரோதமாக கைத்துப்பாக்கிகளைத் தயாரித்து கடத்தியதாக 28 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் பாகங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம், ஆயுத விற்பனை இணையதளம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான விளம்பரம் ஒன்று வெளியானது.

இது குறித்து ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் (RCMP) அளித்த தகவலின் அடிப்படையில், ‘புராஜெக்ட் கிளஸ்டர்’ (Project Cluster) என்ற பெயரில் டொராண்டோ காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

இந்த விசாரணையின் முடிவில், டொராண்டோவைச் சேர்ந்த பிரையன் நர்சிசோ (Brian Narciso) என்ற 28 வயது இளைஞர், கடந்த டிசம்பர் 9, 2025 அன்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரின் வீடு மற்றும் வாகனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.3Aபிரிண்டட் கைத்துப்பாக்கிகள் (இவை ‘கோஸ்ட் கன்ஸ்’ அல்லது நிழல் துப்பாக்கிகள் என்று அழைக்கப்படுகின்றன).

துப்பாக்கி தயாரிப்பதற்கான பாகங்கள் மற்றும் ஒரு 3D பிரிண்டர். துப்பாக்கிச் சுடும் பயிற்சியின் போது பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் 100-க்கும் மேற்பட்ட தோட்டாக் கூடுகள். விசாரணையில், இந்த 3D துப்பாக்கிகள் 2025 ஜூன் முதல் அக்டோபர் வரை டொராண்டோவின் லாரன்ஸ் அவென்யூ மற்றும் கலிடோனியா சாலை பகுதிகளில் நடந்த 6 துப்பாக்கிச் சூடு சம்பவங்களுடன் தொடர்புடையவை என்பது தெரியவந்தது.

பிரையன் நர்சிசோ மீது ஆயுதக் கடத்தல், தடைசெய்யப்பட்ட துப்பாக்கிகளைத் தயாரித்தல், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பொறுப்பற்ற முறையில் துப்பாக்கிச் சூடு நடத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. 

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…