கனடா

கனடாவில் இரு கார்கள் மோதி கோர விபத்து – ஒருவர் பலி, ஐவர் படுகாயம்

 வடக்கு டெல்டாவில் சனிக்கிழமை பிற்பகல் நிகழ்ந்த இரண்டு கார்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் எனபதுடன் மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்டா காவல் துறையின் தகவல்படி, பிற்பகல் 3 மணிக்குப் பிறகு 118-வது தெரு மற்றும் 75A அவென்யூ சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தின் தீவிரத்தால் ஒரு கார் மரத்தின் மீது மோதி நசுங்கியதுடன், மற்றொரு கார் வீட்டின் வேலியையும் தீயணைப்புத் தூணையும் (Fire Hydrant) இடித்துத் தள்ளிக்கொண்டு குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தது.

இந்த விபத்தில் ஒரு காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காயமடைந்தவர்களை மீட்க 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைவாகச் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

காயமடைந்த ஐந்து பேரில் இருவரது நிலைமை கவலைக்கிடமாகவும், மற்ற மூவரின் நிலைமை சீராக இருந்தாலும் பலத்த காயங்களுடன் இருப்பதாக பி.சி. அவசர சுகாதார சேவை (BCEHS) தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த பகுதியில் தடயங்களைச் சேகரிப்பதற்காகச் சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுப் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் டெல்டா காவல்துறையினர், விபத்து நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அல்லது விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வைத்திருப்பவர்கள் 604-946-4411 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்துக்கான சரியான காரணம் குறித்து தீவிரமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…