இலங்கை

வாகன இறக்குமதி வரியின் மீது மேலதிக வரி


இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான சுங்க இறக்குமதித் தீர்வை வரியின் மீது 50% மேலதிக வரியை (Surcharge) விதிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, இன்று (16) முதல் மூன்று மாத காலப்பகுதிக்கு இந்த 50% மேலதிக வரி வசூலிக்கப்படவுள்ளது. 

இருப்பினும், மே 15 அல்லது அதற்கு முன்னர் கடன் கடிதங்கள் (Letter of Credit) திறக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு இந்த புதிய 50% மேலதிக வரி பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த 50% மேலதிக வரியைக் கடந்த ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி முதல் நீக்குவதற்கு நிதி அமைச்சு இதற்கு முன்னர் தீர்மானித்திருந்த போதிலும், அதனை இன்று முதல் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…