இலங்கை

முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வு

17ஆம் தடவையாக நாளை (19) அனுஷ்டிக்கப்படும் யுத்த வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 

பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது. 

தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம், நாட்டில் அமைதியை நிலைநிறுத்தவும் தாய்நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கவும் அளப்பரிய தியாகங்களையும் சிறப்பான சேவையையும் ஆற்றிய முப்படை வீரர்களை கௌரவித்து நன்றி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. 

முப்படைத் தளபதிகளின் பரிந்துரைகளின் பேரிலும் முப்படைகளின் நிர்வாக நடைமுறைகளுக்கு அமைவாகவும் இப்பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…