கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்களை செயலிழக்கச் செய்யுமாறு அறிவிப்பு

தேசிய மின்சார கட்டமைப்பின் சீரான மற்றும் நிலையான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய பலகங்களை (Solar Panels) இன்று (30) பிற்பகல் 3.00 மணி வரை செயலிழக்கச் செய்யுமாறு தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் (தனியார்) நிறுவனம், சூரிய பலகங்களின் உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

வெசாக் பண்டிகை காலத்தில் தேசிய மின்சார கட்டமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காகவும், தற்போதைய மின் நுகர்வு வீழ்ச்சியடைந்துள்ள சூழலைக் கருத்திற்கொண்டும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version