உலகம்

கொங்கோவை தொடர்ந்து பிரேசிலிலும் எபோலா வைரஸ்

பிரேசில் நாட்டில் எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சாவோ பாலோ மற்றும் ரியோ டி ஜெனிரோ ஆகிய நகரங்களைச் சேர்ந்த இருவரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

உகாண்டாவிலிருந்து வருகை தந்த பெல்ஜியம் நாட்டவர் ஒருவருக்கும், கொங்கோ நாட்டைச் சேர்ந்த ஒருவருக்குமே காய்ச்சல் உள்ளிட்ட ஆரம்பகட்ட அறிகுறி தென்பட்டதை அடுத்து, அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதற்கான மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் அடுத்த வார தொடக்கத்தில் வெளியாகும் என பிரேசில் சுகாதாரத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…