கனடா

கனடா குடியிருப்புத் தொகுதியில் தீ விபத்து: பெண் ஒருவர் சடலமாக மீட்பு!

கனடாவின் பிராண்ட்போர்டு பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து மாகாண தீயணைப்புத் துறைத் தலைவர் அலுவலகம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கடந்த வியாழக்கிழமை மாலை சுமார் 4:42 மணியளவில், 103 பான்பரி ரோடில் உள்ள வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிராண்ட்போர்டு தீயணைப்புத் துறைக்கு அவசரத் தகவல் கிடைத்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர், அந்த வீட்டிலிருந்து லேசான புகை வெளியேறுவதைக் கண்டனர்.

உடனடியாக வீட்டிற்குள் நுழைந்த அவர்கள், இரண்டாவது மாடியில் எரிந்து கொண்டிருந்த தீயை விரைவாகச் செயல்பட்டு அணைத்தனர்

இருப்பினும், தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் சோதனையிட்டபோது, துரதிர்ஷ்டவசமாக இரண்டாவது மாடியில் உள்ள ஒரு படுக்கையறையில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பிராண்ட்போர்டு காவல்துறையினர் விபத்து நடந்த இடத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…