No products in the cart.
கனடாவில் கப்பம் கோரல்களில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பிரஜைகள்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் மீது, மிரட்டி கப்பம் கோரல் தொடர்பாக மேலும் பல புதிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமன்ஜீத் சிங் (22), பர்தமன் சிங் (30) ஆகிய இருவருமே கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி கிங் ஜார்ஜ் பவுல்வார்ட் மற்றும் 88 அவென்யூ சந்திப்பிற்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
நள்ளிரவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டபோது அந்த வீட்டின் உரிமையாளர் உள்ளேதான் இருந்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.















