இலங்கை

புத்தூர் விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

மட்டுவில் பகுதியிலிருந்து புத்தூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன், வீதியின் குறுக்கே திடீரென நுழைந்த முச்சக்கர வண்டி மோதி இந்த விபத்து இடம்பெற்றிருந்தது. 

இதன்போது முச்சக்கர வண்டியின் மீது டிப்பர் வாகனம் ஏறியதில், அதில் பயணித்த மூன்று இளைஞர்களின் கால்களும் நசுங்கி அவர்கள் படுகாயமடைந்தனர். 

உடனடியாக அவர்கள் மூவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்களில் புத்தூரைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…