இலங்கை

கிணற்றில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுவன் ஒருவனின் சடலம், வீட்டின் அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. 

நேற்று (12) இரவு இந்தச் சிறுவன் காணாமல் போயுள்ளதாகப் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. 

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சிறுவனின் சடலம் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறு உயிரிழந்தவர் 6 வயதுடைய சிறுவன் எனத் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருன்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…