உலகம்

ரஷ்ய எண்ணெய்க் கப்பல் சிறைப்பிடித்த பிரிட்டன்

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில், ரஷ்ய எண்ணெய்க் கப்பல் ஒன்றை பிரிட்டன் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்துள்ளது.

இதுபோன்ற நடவடிக்கையில் பிரிட்டன் முதல்முறையாக ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் போரையடுத்து ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு பல்வேறு சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

எனினும், அந்தத் தடைகளை மீறுவதற்காக உரிமையாளர்கள் மற்றும் சரக்கு விபரங்களை மறைத்து செயல்படும் ‘நிழல் கப்பல்’ (Shadow Fleet) வலையமைப்பை ரஷியா பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, சுமார் 600 ரஷ்ய கப்பல்களுக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது.

இந்தத் தடையின் மூலம், குறித்த கப்பல்கள் பிரிட்டன் துறைமுகங்களுக்குள் நுழைவதும், அவற்றுக்கு நிதி, காப்பீடு மற்றும் தரகு சேவைகள் வழங்கப்படுவதும் தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘ஸ்மிர்டோஸ்’ (Smirdos) என அழைக்கப்படும் ரஷ்ய எண்ணெய்க் கப்பல் ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டிய ஆங்கிலக் கால்வாயில் பயணித்துக்கொண்டிருந்தபோது, பிரிட்டன் ஆயுதப் படைகளால் இடைமறிக்கப்பட்டது.

சுமார் ஆறு மணி நேரம் நீடித்த இந்த நடவடிக்கையின் பின்னர், குறித்த கப்பல் பிரிட்டனின் தென் கடலோரப் பகுதிக்கு அருகில் தடுத்து நிறுத்தப்பட்டு கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…