கனடா

டொராண்டோவில் துன்புறுத்தல்களில் ஈடுபட்ட நபரைத் தேடும் பொலிஸார்

டொராண்டோவில் நபர் ஒருவரைத் தொடர்ச்சியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கடந்த மே மாதம் 26ஆம் திகதி, பே ஸ்ட்ரீட் மற்றும் ஜெரார்ட் ஸ்ட்ரீட் வெஸ்ட் பகுதியில் நடந்த குற்றவியல் துன்புறுத்தல் தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரைத் தொடர்புகொள்ளத் தொடர்ச்சியாகப் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

What's your reaction?

Related Posts