இலங்கை

வைபவ் சூர்யவன்சி உலக சாதனை

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக ஒருநாள் அரைச்சதத்தை பதிவு செய்து இந்திய ‘ஏ’ அணியின் வைபவ் சூர்யவன்சி இன்று (21) உலக சாதனை படைத்துள்ளார்.

இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிராக தம்புள்ளையில் நடைபெற்று வரும் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

இதில் வெறும் 11 பந்துகளில் அவர் அரைச்சதம் கடந்தார்.

அவரது இந்த அதிரடி ஆட்டத்தில் 5 ஆறு ஓட்டங்களும், 5 நான்கு ஓட்டங்களும் அடங்கும்.

எவ்வாறாயினும், 29 பந்துகளில் 94 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் சஹான் ஆராச்சிகேவின் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார்.

இலங்கை, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டி தற்போது தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…