No products in the cart.
அமெரிக்காவிற்கான கனடியர்களின் பயணம் மீண்டும் அதிகரிப்பு
கனடியர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதைத் தவிர்த்து வந்த நிலையில், ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது எல்லை தாண்டிய பயணங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகப் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் கனடாவில் வசிக்கும் மக்கள் அமெரிக்காவிற்குச் சென்று திரும்பிய பயணங்களின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 1.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு, அமெரிக்கப் பயணங்களின் எண்ணிக்கையில் இத்தகையதொரு அதிகரிப்பு பதிவாவது இதுவே முதல் முறையாகும். இந்த அதிகரிப்பிற்கு முக்கியக் காரணமாக கார் மூலமான பயணங்கள் அமைந்துள்ளன.















