கனடா

கனேடிய குடியுரிமைச் சான்றிதழ்களை ஒப்படைக்கக் கோரியது ஏன்? புலம்பெயர்தல் அமைச்சரிடம் கேள்வி

சிலருடைய கனேடிய குடியுரிமைச் சான்றிதழ்களை ஒப்படைக்கக் கோரியது ஏன் என புலம்பெயர்தல் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

கனடாவில், வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

இந்நிலையில், தங்கள் குடியுரிமைச் சான்றிதழ்களை ஒப்படைக்கக் கோரி அவர்களில் பலருக்கு கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு கடிதம் அனுப்பியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

பின்னர், அத்தகைய கடிதம் அனுப்பப்பட்ட பலரில் சிலருக்கு வார இறுதியில் மீண்டும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.

அந்தக் கடிதத்தில், நீங்கள் குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதற்காக அளித்த ஆவணங்களை மீளாய்வு செய்ததைத் தொடர்ந்து, ஜூன் மாதம் 13ஆம் திகதி உங்கள் குடியுரிமைச் சான்றிதழை ஒப்படைக்குமாறு உங்களிடம் கோரப்பட்டது.

உங்கள் வழக்கு முழுமையாக மீளாய்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உங்கள் குடியுரிமை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிலருடைய கனேடிய குடியுரிமைச் சான்றிதழ்களை ஒப்படைக்கக் கோரியது ஏன் என புலம்பெயர்தல் அமைச்சரான Lena Diabஇடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். 

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…