கனடாவின் 159வது கூட்டமைப்பு ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாடு முழுவதும் இன்று கனடியர்கள் உற்சாகமாக கனடா தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
உலக அரசியல் மாற்றங்கள் மற்றும் சில மாகாணங்களில் எழுந்துள்ள பிரிவினை கோரிக்கைகள் போன்ற சவால்கள் நிலவும் சூழலில், தேசிய ஒற்றுமையின் முக்கியத்துவம் இந்த ஆண்டு கொண்டாட்டங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கனடா உலகின் சிறந்த நாடு. சவால்களும் சிக்கல்களும் இருந்தாலும், சுதந்திரம், பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நாடாக இது திகழ்கிறது என அமைச்சர் மார்க் மில்லர், தெரிவித்துள்ளார்.
