கனடா

கனடாவில் காணாமல் போன 7 வயது சிறுவன் ஏரியில் சடலமாக மீட்பு

கனடா தினமன்று ஹாமில்டன் பகுதியில் உள்ள இயற்கை பாதுகாப்பு வலயத்திற்குச் சென்றபோது காணாமல் போன ஏழு வயது சிறுவன், துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

நெத்தானியேல் செலம்பி என அடையாளம் காணப்பட்ட இந்தச் சிறுவன், கடந்த புதன்கிழமை (ஜூலை 1) பிற்பகல் 3 மணியளவில் ‘பின்புரூக் பாதுகாப்பு வலயத்தில்’ இருந்தபோது திடீரென காணாமல் போயிருந்தான். சிறுவனைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார், அவசரகால மீட்புப் படையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பெருமளவிலான தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

இந்நிலையில், பீல் பிராந்திய பொலிஸாரின் நீருக்கடியிலான தேடுதல் மற்றும் மீட்புக் குழுவின் முக்குளிப்பாளர்கள், நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில் சிறுவனின் உடலை ஏரிப் பகுதியில் இருந்து மீட்டனர்.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…