No products in the cart.
கொங்கோவில் எபோலா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் எபோலா வைரஸ் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக கொங்கோ, சூடான் மற்றும் உகாண்டா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா தொற்றின் தாக்கம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அந்தந்த நாட்டு அரசுகள் தொற்றைக் கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.















