இலங்கை

இரு பெண்களை காரால் மோதி தப்பிச் சென்ற OIC கைது

இரண்டு வெவ்வேறு இடங்களில் இரு பெண்களை விபத்துக்குள்ளாக்கி, காரில் தப்பிச் செல்ல முயன்ற ஹோமகம சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான (OIC) பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹைலெவல் வீதி, மீகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலும் மற்றும் வட்டரக்க 20 ஆம் கட்டை பகுதியிலும் நேற்று (25) இரவு 11:30 மணிக்கும் 11:57 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த இரண்டு விபத்துகளும் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்கொள்ளப்பட்ட மதுபோதைச் சோதனையில், சந்தேகநபர் மதுபோதையில் காரைச் செலுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (26) ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…