இலங்கை

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பசறை மருத்துவமனை

நீரைச் சுத்திகரிக்கப் பயன்படுத்தும் குளோரின் வாயு சிலிண்டர் ஒன்றில் ஏற்பட்ட கசிவின் காரணமாக பசறை மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பசறை மருத்துவமனையின் அருகே அமைந்துள்ள பசறை பிரதேச சபையின் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த குளோரின் வாயு சிலிண்டர் ஒன்றில் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மருத்துவமனையின் பணியாளர் விடுதியில் தங்கியிருந்த மூதாட்டியொருவர் பசறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பதுளை மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஒரு யுவதி, ஒரு வாலிபர் உள்ளிட்ட மூவர் தொடர்ந்தும் பசறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

எனினும் குளோரின் வாயு சிலிண்டர் கசிவு பாரதூரமான அளவில் காணப்பட்ட நிலையில் பசறை மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அங்கிருந்த சகல நோயாளிகளும் ஹொப்டன் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…