இலங்கை

FBC பரிசோதனைக்கு அதிகக் கட்டணம் வசூலித்த வைத்தியசாலைக்கு அபராதம்

முழுமையான இரத்தப் பரிசோதனைக்கு (FBC) நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிகத் தொகை வசூலித்த வவுனியா பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, முழுமையான இரத்தப் பரிசோதனைக்குக் கட்டுப்பாட்டு விலையை விட அதிகத் தொகை வசூலிக்கப்பட்டமை கண்டறியப்பட்டதாக அவ்வதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த தனியார் வைத்தியசாலைக்கு எதிராக வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தனியார் வைத்தியசாலைக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…