உலகம்

துப்பாக்கிச் சட்டங்களில் திருத்தம் செய்ய தாய்லாந்து அரசு கவனம்

தாய்லாந்தில் துப்பாக்கிப் பயன்பாடு தொடர்பான சட்டங்களை திருத்துவது குறித்து அந்நாட்டு அரசு கவனம் செலுத்தியுள்ளது.

பாடசாலை மாணவன் ஒருவன் 8 பேரைக் சுட்டுக் கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து, தொடர்புடைய சட்டங்களை திருத்துவது குறித்து தாய்லாந்து பிரதமர் கவனம் செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, பொது இடங்களில் துப்பாக்கிகளைக் கொண்டு செல்வதைத் தடை செய்யவும், அரசாங்க பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் மட்டுமே ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடிய வகையில் சட்டங்களைத் திருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தாய்லாந்து பிரதமர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

பேங்கொக்கில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 5 ஆசிரியர்கள் உயிரிழந்ததுடன், மேலும் 30 பேர் வரை காயமடைந்தனர்.

அதே பாடசாலையைச் சேர்ந்த 14 வயது மாணவன் ஒருவனே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளான்.

துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் அம்மாணவன் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்தனர்.

தனது பாட்டி மற்றும் தாத்தாவுடன் வசித்து வந்த அம்மாணவன், பள்ளிக்குச் செல்வதற்கு முன்னர் அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

What's your reaction?

Related Posts

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி

13 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தமை மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட கூற்றுகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை சடுதியாக சரிவடைந்துள்ளது. WTI கச்சா எண்ணெய்…