ஜனாதிபதியுடனான சட்டத்தரணிகள் சங்கத்தின் முக்கிய பேச்சுவார்த்தை நிறைவு!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் யோசனை தொடர்பில் ஜனாதிபதியுடன் வெற்றிகரமான கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும், அக்கலந்துரையாடலின் பின்னர் தீர்மானத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

குறித்த யோசனை தொடர்பில் ஜனாதிபதியுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அந்தச் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய இதனைத் தெரிவித்தார். 

இதன்போது, ஜனாதிபதியிடம் விரிவான விளக்கங்களை வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version