கனடா

கனடாவில் நாய்களைக் கட்டுப்பாடின்றி உலாவ விட்ட நபர் விதிக்கப்பட்ட தண்டனை

 கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், தனது நாய்களை சங்கிலியால் பிணைக்காமல் அழைத்துச் சென்று பெண் ஒருவரைக் கடிக்கக் காரணமான உரிமையாளருக்கு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 1,139 டொலர்களை நஷ்டஈடாக வழங்குமாறு சிவில் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யூசிஃப் தக்லா என்பவர் தனது இரு நாய்களையும் சங்கிலியால் பிணைக்காமல் அழைத்துச் சென்றபோது, வீட்டின் கேட் அருகே நின்றிருந்த வெய்ஷென் வாங் என்ற பெண்ணை அந்த நாய்கள் தாக்கி கடித்தன.

இச்சம்பவத்தினால் காயமடைந்த பெண், ஆம்புலன்ஸ் சேவைக்கட்டணம், வருமான இழப்பு, வடு நீக்கும் சிகிச்சை மற்றும் மன உளைச்சல் என்பவற்றுக்காக மொத்தம் 3,148 டொலர்கள் இழப்பீடு கோரி தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

What's your reaction?

Related Posts

கனடாவில் ஓடும் போலீஸ் வாகனத்திலிருந்து தப்பித்த நபர் காயம்

கனடாவின் எல்ஜின் கவுண்டி பகுதியில், காவல்துறையின் காவலில் இருந்த நபர் ஒருவர் ஓடும் வாகனத்திலிருந்து தப்பித்து, பின்னர் காயமடைந்த சம்பவம் குறித்து மாகாணத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு (SIU) விசாரணையைத் தொடங்கியுள்ளது. சனிக்கிழமை மதியம்…