உலகம்விளையாட்டு

டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ருமேஷ் தரங்க வெற்றி!

பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் முதலிடம் பிடித்து இலங்கையின் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க சாதனை படைத்துள்ளார். 

இதன் மூலம், டைமண்ட் லீக் இறுதிப் போட்டியொன்றில் வெற்றி பெற்ற முதல் மற்றும் ஒரே இலங்கை வீரர் என்ற வரலாற்றுப் பதிவை ருமேஷ் தரங்க தனதாக்கிக்கொண்டார். 

இலங்கை நேரப்படி இன்று (06) அதிகாலை நிறைவடைந்த இப்போட்டியில், அவர் 89.04 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இந்தச் சாதனையை நிலாநாட்டினார். 

இப்போட்டியில் ருமேஷிற்கு கடும் சவாலாக விளங்கிய போலந்தின் டேவிட் வேக்னர் (Dawid Wegner) 87.47 மீற்றர் தூரம் எறிந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 

மேலும், 83.99 மீற்றர் தூரம் எறிந்த ட்ரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டின் கெஷோர்ன் வோல்கோட் (Keshorn Walcott) மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

What's your reaction?

Related Posts

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின்…