தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் மேலும் பல தகவல்கள்

தெஹிவளையில் கை்குண்டுத்தாக்குதல் நடத்தி இரு சிறுவர்களைப் படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்கள் இருவர் தொடர்பாகப் பல முக்கிய தகவல்களைப் பொலிஸார் தற்போது கண்டறிந்துள்ளனர். அதற்கமைய, அவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கடந்த 11ஆம் திகதி அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தையின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

Exit mobile version