கனடா

கப்பம் கோரல் விசாரணையில் மூவர் கைது

கனடாவின் பிராம்டனில் கப்பம் கோரல் குற்றச்சாட்டில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பீல் பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 30ஆம் திகதி, பிராம்ப்டனில் குயின் வீதி மற்றும் கெனடீ சாலை தெற்குப் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக்குப் பின்னர், போலீசார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.

சம்பவத்தின் போது அந்த வளாகத்தில் யாரும் இருக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, உரிய நபர் ஒருவருக்கு தெரியாத நபரிடமிருந்து பணம் கோரிய மிரட்டல் செய்திகளும் கிடைக்கத் தொடங்கின.

மே 1ஆம் திகதி, பல்வேறு விசாரணை அணிகள், கண்காணிப்பு, சமூகவியல் கையாளும் குழு மற்றும் நடவடிக்கைக் குழுவின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் பின்னர், பிராம்ப்டனைச் சேர்ந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹர்பால் சிங், ரஜ்னூர் சிங் மற்றும் எக்னூர் சிங் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மூவரும் தற்போது காவலில் வைத்து, பிணை விசாரணைக்கு முன்பாக நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட உள்ளனர்.

What's your reaction?

Related Posts

கனடா பலமானதும் சுதந்திரமானதுமாக இருக்க வேண்டும் – மன்னர் சார்ள்ஸ்

கனடா பலமானதும் சுதந்திரமானதுமாக இருக்க வேண்டுமென மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். கனடிய நாடாளுமன்றில்அக்கிராசன உரை நிகழ்த்திய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மன்னார் சார்ள்ஸின் இந்த கருத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நேரடி…