இலங்கை

சிறைச்சாலையில் ரிவால்வர் கண்டுபிடிப்பு

வெலிக்கடை சிறைச்சாலையின் எல் வார்டுக்குப் பின்னால் கழிவுநீர் ஓடும் வடிகால் அருகே மண்ணை அகற்றும் போது 0.38 ரிவால்வர் க்கப்பட்டது என வெலிக்கடை சிறைச்சாலையின்  சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.

பொரளை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து அங்கு அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், வெலிக்கடை சிறைச்சாலையிலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ரிவால்வர் பல ஆண்டுகளாக மண்ணுக்கு கீழ் இருந்ததாக சந்தேகிக்கப்படுவதாகவும், விசாரணைக்காக அது பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும்  திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…