இலங்கை

தேசபந்து தென்னகோனுக்கு உயிர் அச்சுறுத்தல்!

கட்டாய விடுப்பில் உள்ள முன்னாள் பிரதி காவல்துறைஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பாதுகாப்பு கோரிக்கை தொடர்பில் அவருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

விசாரணைகளைத் தொடர்ந்து, தேசபந்து தென்னகோனின் உயிருக்கு என்ன மாதிரியான அச்சுறுத்தல்கள் என்பதை பொறுத்து பாதுகாப்பு வழங்குவதா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

அதுருகிரிய உதவிப் காவல்துறை அத்தியட்சகரும் அதுருகிரிய காவல்துறை கட்டளைத் தளபதியும் சமீபத்தில் தேசபந்து தென்னகோனின் வீட்டிற்குச் சென்று, வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் காஞ்சிபானி இம்ரான் என்ற பாதாள உலகத் தலைவர் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

தேசபந்து தென்னகோன் தனது சேவைக் காலத்தில், பாதாள உலகம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாலும், நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பை அழிக்கப் பாடுபட்டதாலும், பாதாள உலகத்தை அடக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாலும் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சிறையில் உள்ள இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து குற்றப் புலனாய்வுத் துறை சமீபத்தில் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…