இந்தியா

சிந்து நதி நீர் ஒப்பந்த விவகாரத்தில் தலையிட உலக வங்கி மறுப்பு

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா இரத்துச் செய்த விவகாரத்தில் தலையிட உலக வங்கி மறுத்துள்ளது.

இது தொடர்பில் உலக வங்கி தலைவர் அஜய் பங்கா தெரிவித்திருப்பதாவது,

“சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தில் உலக வங்கி தலையீட்டு பிரச்சனையை சரிசெய்யும் என்று ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவை முட்டாள்தனமானவை. ஏனெனில் இந்த விடயத்தில் உலக வங்கி மத்தியஸ்தராக மாத்திரமே செயல்பட்டது.

சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் என்பது இருநாடுகளுக்கு இடையேயான பிரச்சனை. அதில் மத்தியஸ்தராக மட்டுமே செயற்பட்டோம்.

அதில் தலையீடு செய்ய முடியாது” என கூறியுள்ளார்.

அஜய் பங்காவின் இந்த கருத்து பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. அத்துடன் உலக வங்கி இந்தியாவிடம் இருந்து சிந்து நதிநீரை பெற்று தரும் என்று நினைத்த பாகிஸ்தானுக்கு இது பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.

What's your reaction?

Related Posts

அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 274 ஆக உயர்வு

இந்தியாவின் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் (12) மதியம் புறப்பட்டது. அந்த விமானத்தில் இந்தியா, இங்கிலாந்து, கனடா மற்றும் போர்த்துக்கல் நாடுகளை…