இலங்கை

மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து

கண்டி – கடுகண்ணாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எம்பில்மீகம பிரதேசத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்து நேற்று 11 ஆம் திகதி இரவு 10.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு படையினர் இணைந்து தீப்பரவலை கட்டுப்படுத்தியுள்ள நிலையில் தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.

விற்பனை நிலையத்தில் இருந்த 20 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…