இலங்கை

சகோதரனை ஆயுதத்தினால் தாக்கிய நபர் பதுளை காவல்துறையினரால் கைது!

பதுளை நகரில் நேற்று பிற்பகல் தமது சகோதரனை ஆயுதத்தினால் தாக்கி பலத்த காயமடையச் செய்ததாகக் கூறப்படும் நபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

தனிப்பட்ட முரண்பாடு காரணமாக சந்தேகநபர், சில மாதங்களுக்கு முன்பாக தமது இளைய சகோதரரின் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தமை தெரியவந்துள்ளது.  சில தினங்களுக்கு முன்னர் சிகிச்சையிலிருந்து மீண்டுவந்த குறித்த நபர், இன்றைய தினம் தமது சகோதரனை பதிலுக்குத் தாக்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

  சம்பவத்தின் பின்னர், குறித்த நபர் அங்கிருந்து தப்பியோட முயற்சித்த நிலையில், பொதுமக்களின் உதவியுடன் அவரை பதுளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

 தாக்குதலில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…