இலங்கை

சீரற்ற வானிலையால் சேதமடைந்த வீடுகளுக்கு1,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

சீரற்ற வானிலை காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பேரிடர் காரணமாக முழுமையாக சேதமடைந்த வீட்டிற்கு 2.5 மில்லியன் ரூபாவும், பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு சேதத்தின் அளவிற்கேற்ப இழப்பீடு வழங்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் கே.ஜி.தர்மதிலக தெரிவித்தார்.

பேரிடர் காரணமாக உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் 1 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை பேரிடரால் ஊனமுற்ற ஒருவருக்கு 1 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

வீடொன்றின் மீது விழுந்த பாரிய மரம்

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வீசும் பலத்த காற்று காரணமாக, நேற்று நானுஓயா உட ரதெல்ல பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், ஒரு வீடு பகுதியளவு சேதமடைந்துள்ளதோடு, வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாக…