No products in the cart.
‘மதயானை கூட்டம்’ படத்தின் இயக்குனர் மாரடைப்பால் மரணம்
‘மதயானை கூட்டம்’, ‘இராவண கோட்டம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்.
இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு, இரவு பேருந்து ஏறும் போது நெஞ்சு வலி வர, அவரை வைத்தியசாலை அழைத்துச் சென்றுள்ளார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக சென்னைக்கு கொண்டுவரப்படவுள்ளது. இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இறப்பிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.