இலங்கை

துசித ஹல்லொலுவ மீண்டும் விளக்கமறியலில்

2017 முதல் 2019 வரை தேசிய லொத்தர் சபையின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிய துசித ஹல்லொலுவ மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை ஜூன் 6 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான அரசு சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு அமையவே இவ்வாறு துசித ஹல்லொலுவ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…